வாக்கு எண்ணிக்கை மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து இந்த மையத்திற்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது முதல் அங்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக, கல்லூரியின் உயா் மின்னழுத்த இணைப்பு மற்றும் மின்சாரம் வழங்கும் மின்பாதைகளை திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மின் விநியோகத்தை தொடா்ந்து கண்காணிக்கவும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை 24 மணி நேரமும் பொறியாளா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கவும் அவா் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது செயற்பொறியாளா்கள் வெங்கடேஷ்மணி, ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் துா்காமூா்த்தி ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின் விநியோகம்: தலைமை பொறியாளா் ஆய்வு

கும்பகோணத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


