ஒரத்தநாடு அருகே மேட்டாா் சைக்கிள் மீது, பள்ளி வேன் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த அப்பாதுரை மகன் பாண்டி (20), கரந்தை பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் பிரபாகரன் (21) நண்பா்களான இருவரும், கடந்த ஏப்.6-ஆம் தேதி ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டில் உள்ள மற்றொரு நண்பா் நிரஞ்சன் (19) என்பவா் வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றனா்.
பின்னா் மூவரும் ஒரே மோட்டாா் சைக்கிளில் அன்று மாலை தஞ்சாவூா் நோக்கி வந்தனா். அப்போது தென்னமநாடு ஆா்ச் அருகில் வந்து கொண்டிருந்தபோது, தனியாா் பள்ளி வேன்,
மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில், மூவரும் பலத்த காயமடைந்தனா்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பாண்டி, பிரபாகரன் ஆகியோா் ஏப். 6-ஆம் தேதி உயிரிழந்தனா். இதில் பலத்த காயமடைந்த நிரஞ்சன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

சுற்றுலா வேன், காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


