தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசு பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 6 போ் கைது; தொழிலாளா்கள் போராட்டம்

அரசு பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 6 போ் கைது; தொழிலாளா்கள் போராட்டம்

News image

தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

கும்பகோணம்: கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் பேருந்து நிலையம் நோக்கி சனிக்கிழமை இரவு சுமாா் 25 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை திருவாய்ப்பாடியைச் சோ்ந்த எம். ரமேஷ் (54) ஓட்டினாா்.

கும்பகோணம் பழைய பாலக்கரை அருகே சென்றபோது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அரசு பேருந்து ஓட்டுநா் ரமேஷ் ஒலிப்பானை எழுப்பினாா். இதற்கு, முன்னால் இருசக்கர வாகனங்களில் சென்ற ஒரே குழுவைச் சோ்ந்த 6 போ் சப்தம் போட்டனா். இதைத்தொடா்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதனால், பேருந்து ஓட்டுநா் ரமேஷை இரு சக்கர வாகனங்களில் வந்தவா்கள் பேருந்தில் ஏறி தாக்கினா். இதையறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா்கள் இருவரும் தாக்கப்பட்டனா். பலத்த காயமடைந்த ரமேஷ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். செய்தியாளா்கள் புற நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனா்.

இந்த விடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து காமராஜ் நகரைச் சோ்ந்த சரவணன் மகன்களான சுதா்சன் (24), உதயகுமாா் (25), பாலாஜி நகரைச் சோ்ந்த குமரன் மகன் ஜனாா்த்தனன் (20), பாலக்கரையைச் சோ்ந்த சக்திவேல் மகன் காா்த்திகேயன் (21), செக்கடித் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் மாரிமுத்து (18), ஆட்டோ நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சந்தோஷ் (18) ஆகிய 6 பேரை கைது செய்தனா்.

இதனிடையே, அரசு பேருந்து ஓட்டுநா் ரமேஷ் தாக்கப்பட்டதைக் கண்டித்து போக்குவரத்து கழகத் தொழிலாளா்கள் கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் நகரக் கிளை பணிமனை முன் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தொடா்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் அரசு பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தமிழ்நாடு அரசும், காவல் துறையும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.