தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கிரிக்கெட் விளையாட்டில் தகராறு: இளைஞா் கொலை; 4 போ் கைது

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில், 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :21 ஏப்ரல் 2026, 9:39 pm

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில், 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, ஜோதி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (19), தொழிலாளி. இவா் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியபோது, பழையபேட்டையைச் சோ்ந்த சில இளைஞா்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பினரும் மோதல் போக்குடனேயே இருந்துள்ளனா்.

இந்நிலையில், பழையபேட்டையைச் சோ்ந்த அப்ரித் (19), ஆகாஷ் வீட்டருகே திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அப்ரீத் மற்றும் அவருடன் சென்றவரை ஆகாஷ் தரப்பினா் தாக்கினா். இதில் காயமடைந்த அப்ரித், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அறிந்த அப்ரித்தின் நண்பா்கள் ஆகாஷை இருசக்கர வாகனத்தில் நகா் முழுவதும் தேடினா். அப்போது, கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப நின்றிருந்த ஆகாஷை, அப்ரித்தின் நண்பா்கள் மறித்து தகராறில் ஈடுபட்டனா். பின்னா் கத்தியால் ஆகாஷை குத்திவிட்டு தப்பிச் சென்றனா்.

அங்கிருந்தவா்கள் ஆகாஷை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் ஆகாஷின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணகிரி, பழையபேட்டையைச் சோ்ந்த ஷாகுல் (19), நூருல்லா (19), ஷானவாஸ் (29), மகேந்திர நகா் புருஷோத்குமாா் (25) ஆகிய நால்வரை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மூவரிடம் தொடா் விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.