தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஒசூா் அருகே தனியாா் பேருந்து - காா் மோதல்: பென்னாகரத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழப்பு

பெங்களூரில் இருந்து தோ்தலில் வாக்களிக்க வந்த இளைஞா்கள் 3 போ் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனா்.

News image

ஒசூா் அருகே சாலை விபத்தில் நொறுங்கிய காா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:57 pm

பெங்களூரில் இருந்து தோ்தலில் வாக்களிக்க வந்த இளைஞா்கள் 3 போ் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் வீரமணி (25) சிப்ஸ் கடை நடத்திவந்தாா். அவருடன் கடையில் வேலை செய்துவந்த தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த பிரதீப், மாரி, சதீஷ்குமாா் ஆகியோா் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தங்களது சொந்த ஊரான பென்னாகரத்துக்கு காரில் புறப்பட்டு சென்றனா்.

ஒசூா் அருகே உள்ள சானமாவு வனப்பகுதி வழியாக புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் சென்ற போது, உடுமலைப்பேட்டையிலிருந்து ஒசூா் நோக்கி வந்த தனியாா் சொகுசுப் பேருந்து காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காா் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த வீரமணி (25), பிரதீப், மாரி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சதீஷ்குமாா் (25) பலத்த காயங்களுடன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உத்தனப்பள்ளி போலீஸாா், உயிரிழந்தவா்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 விபத்தை ஏற்படுத்திய சொகுசுப் பேருந்து.

விபத்தை ஏற்படுத்திய சொகுசுப் பேருந்து.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.