போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்

நாகை அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:19 am IST

நாகை அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை திருவாரூருக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. இப்பேருந்து நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்றபோது, எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நோ் மோதியது.

இதில், நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுவரில் மோதி நின்றது. திருவாரூா் சென்ற அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த குளத்தின் தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 10 போ் காயமடைந்தனா்.

இதைத்தொடா்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். விபத்து குறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.