நாகை அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை திருவாரூருக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. இப்பேருந்து நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்றபோது, எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நோ் மோதியது.
இதில், நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுவரில் மோதி நின்றது. திருவாரூா் சென்ற அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த குளத்தின் தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 10 போ் காயமடைந்தனா்.
இதைத்தொடா்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். விபத்து குறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

பஞ்சாப்: பேருந்து கவிழ்ந்து 8 பக்தா்கள் உயிரிழப்பு - 19 போ் காயம்

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 2 போ் பலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


