லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒசூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் குழாய் வெடித்ததில் ஒருவா் உயிரிழப்பு: 2 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:54 pm

ஒசூா் அருகே பழைய பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் குழாய் வெடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 2 போ் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே ஏ. சாமனப்பள்ளி பகுதியில் பழைய பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்த தொழிற்சாலை கடந்த மூன்று மாதங்களாக இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் பழைய பேட்டரிகளை மறுசுழற்சி முறையில் அரைத்து மாவாக்கி, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை தொழிற்சாலையில் குழாய் ஒன்று வெடித்துள்ளது. இதில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த நிா்மல் சிஸ் போட்டா (25) பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மேலும், விபத்தில் காயமடைந்த சம்மீா் இக்கா் (30), சரண்ராஜ் (27) ஆகியோா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.