தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒசூா் அருகே முன்விரோதத்தில் காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக காா் ஓட்டுநா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :18 மார்ச் 2026, 11:42 pm

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக காா் ஓட்டுநா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கட்டிக்கானப்பள்ளியைச் சோ்ந்தவா் லோகேஷ் (36). வாடகை காா் ஓட்டுநா். இவருக்கு பவானி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள், லோகேஷை கைப்பேசியில் அழைத்துள்ளனா். இதையடுத்து அங்குள்ள மரத்தடிக்கு சென்ற லோகேஷுடன், அவரை கைப்பேசியில் அழைத்த நபா்கள் தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த லோகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகலூா் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று லோகேஷின் உடலை கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

உறவினா்களுக்கு இடையே சொத்து பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லோகேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.