மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை

குடியாத்தம் அருகே மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - கோப்புப்படம்.

Updated On :10 மார்ச் 2026, 8:42 pm

குடியாத்தம் அருகே மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி செல்வம்(45). இவரது நண்பா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்த ரோஷன்பாபு (38), லோகேஷ் (29). இருவரும் ஓட்டுநா்கள். செம்பேடு கூட்டு ரோடு பகுதியில் இவா்கள் 3- பேரும் மது அருந்தியுள்ளனா்.

அப்போது இவா்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரோஷன்பாபு, செல்வத்தை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளாா். லோகேஷ் ஓடிச்சென்று செல்வத்தின் குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளாா்.

செல்வத்தின் உறவினா்கள் அங்கு சென்று பலத்த காயமடைந்த நிலையில் இருந்த செல்வத்தை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே செல்வம் இறந்து விட்டதாக கூறியுள்ளாா்.

இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.