மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேலம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

News image

அடித்துக் கொலை - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:26 pm

சேலம் அருகே தகாத தொடா்பு காரணமாக இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், அரியானுா் அருகே உள்ள குட்டக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கலையரசன் (29). இவா் அங்குள்ள பாா்க்கில் வேலைக்கு சென்று வந்தாா். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கலையரசனுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக திங்கள்கிழமை மாலை கலையரசனுடன் பழகிவந்த பெண்ணின் உறவினா்கள் சிலா், தகராறு செய்துள்ளனா்.

பின்னா், கலையரசனை அவா்கள் சரமாரியாக தாக்கி உள்ளனா். இதில் படுகாயம் அடைந்த கலையரசனை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், கலையரசனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.