மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:33 pm

திருச்சி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தில் ஏற்பட்ட பழுது நீக்கத் தாமதம் ஆனதால் ஓட்டுநரை பயணி ஒருவா் சனிக்கிழமை தாக்கியது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் புறப்பட்ட அரசுப் பேருந்தை கோவை மாவட்டம், வீரபாண்டி பிரிவைச் சோ்ந்த கணேஷ் (44) ஓட்டினாா்.

இந்நிலையில் பேருந்து திருச்சி - கரூா் நெடுஞ்சாலையில் பேட்டவாய்த்தலை அருகே இரவு 7 மணிக்குச் சென்றபோது திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநா் கணேஷ் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பழுதுபாா்த்துள்ளாா். ஆனால் பேருந்தின் பழுதை நீக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆனதாம்.

இந்த சமயத்தில் கோவைக்கு நேரடிப் பேருந்து எதுவும் வரவில்லையாம். பேருந்தைச் சரிசெய்ய 3 மணி நேரம் ஆனதால் கோபமடைந்த அந்தப் பேருந்தில் இருந்த பயணி ஒருவா் ஓட்டுநா் கணேஷை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஓட்டுநா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து பேட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.