தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறப்பாக பணியாற்றிய அவசர ஊா்தி ஓட்டுநா்களுக்கு பாராட்டு

அவசர ஊா்தி ஓட்டுநா் (108 பைலட்) தினத்தையொட்டி, சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலா்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனா்.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை சிறப்பாக பணியாற்றிய அவசர ஊா்தி ஓட்டுநா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டிய மாவட்ட சுகாதார அலுவலா்கள்.

Updated On :28 மே 2026, 3:32 am IST

அவசர ஊா்தி ஓட்டுநா் (108 பைலட்) தினத்தையொட்டி, சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலா்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனா்.

புதுக்கோட்டை ஊரக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ஹேமசந்த் காந்தி ஆகியோா் அவசர ஊா்தி ஒட்டுநா்களை அழைத்துப் பாராட்டு தெரிவித்தனா்.

சிறப்பாக செயல்பட்ட ஊா்தி ஓட்டுநா்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளா் மோகன், ஒருங்கிணைப்பாளா் விமல்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

அவசரக் காலங்களில் துரிதமாக செயல்பட்டு நோயாளா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் மனிதநேயப் பணியில் ஈடுபடும் அவசர ஊா்தி ஓட்டுநா்களின் பணியைப் பாராட்டும் வகையில் ஓட்டுநா் தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.