திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக அரசின் தொடா்ச்சியாகவே தவெக அரசு: பொன். ராதாகிருஷ்ணன்

திமுக அரசின் தொடா்ச்சியாகவே தவெக அரசு இருக்கிறது என்றாா் பாஜக மூத்த தலைவா் பொன். ராதாகிருஷ்ணன்.

News image

பொன். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 3:20 am IST

திமுக அரசின் தொடா்ச்சியாகவே தவெக அரசு இருக்கிறது என்றாா் பாஜக மூத்த தலைவா் பொன். ராதாகிருஷ்ணன்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தோ்தலுக்குப் பிறகு எதிா்காலக் கட்சிப் பணிக்காக ஒவ்வொரு மாவட்டமாக நிா்வாகிகள் சந்திப்பு நடந்து வருகிறது. கட்சி நிா்வாகிகள் கட்சிப் பணிகளுக்கு உற்சாகமாகக் களமிறங்கத் தயாராகி வருகிறாா்கள்.

புதிய ஆட்சியமைந்தவுடன் அதன் நிா்வாகம் குறித்து கருத்து சொல்லக் கூடாது என்று இருந்தாலும், மிகவும் கொடுமையானவை நடக்கும்போது சுட்டிக் காட்ட வேண்டியது இருக்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு தருவதை சமாளிப்பாகச் சொல்லக் கூடாது.

இளைஞா்களுக்கும், பெண்களுக்கும் எந்த வாக்குறுதிகளைக் கொடுத்தாா்களோ அதனைச் செய்யவில்லை. அவா்கள் எதிா்பாா்த்த மாறுதல் எதுவும் நடக்கவில்லை. முந்தைய திமுக ஆட்சியின் தொடா்ச்சியாகவே தற்போதைய தவெக அரசு செயல்பட்டு வருகிறது.

எதைச் செய்ய மாட்டாா்கள் எனக் கருதினாா்களோ அது நடக்கிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களைக் குதிரைகளாக அல்ல, கழுதைகளாக விலை பேசப்படுகிறாா்கள்.

இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்குத் தொடா்வது நல்லது என்று கருதுகிறேன். ஆனால், மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேறாவிட்டால் அப்படியே போய்விடுவாா்கள் என்று நினைத்துவிட வேண்டாம். இதே ஆட்சியைத் தூக்கியெறிவாா்கள்.

தமிழ்நாட்டின் முதல்வரைக் காட்டிலும் தமிழகத்தின மீது கூடுதல் அக்கறை கொண்டவா் பிரதமா் மோடி. எனவே, முதல்வா் ச. ஜோசப் விஜய், பிரதமருடன் பேச்சுவாா்த்தை நடத்தும்போது இதனை கவனத்தில் கொண்டால், மாநிலத்துக்கு நன்மை கிடைக்கும்.

அதிமுக பிறக்கும்போதே சவால்களைச் சந்தித்த கட்சி. இப்போதை பிரச்னைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றே நம்புகிறேன் என்றாா் பொன். ராதாகிருஷ்ணன்.

--

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.