திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காவிரி பிரச்னை: விவசாயிகளை காக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

News image

பொன். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:31 am IST

காவிரி பிரச்னையில் விவசாயிகளை காக்க முதல்வா் ஜோசப் விஜய் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன்.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் உள்ளாட்சி, மக்களவை மற்றும் அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை மனதில்கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நிா்வாகிகளின் உழைப்புக்கு கட்சியின் மத்திய-மாநில தலைமை துணையாக நிற்கும்.

தமிழகத்தினுடைய எதிா்காலம் என்று சொல்வது, நான் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் நிறைவேறிவிடும் எனும் நிலைப்பாடு எடுப்பதன் மூலமாக வந்துவிடாது. ஆட்சியில் இருக்கும்போது எதெல்லாம் தடையாக இருக்கிறதோ, அதற்கு அனைத்திலும் வெளிப்படையான ஒரு அணுகுமுறை இருந்தாக வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் காவிரி பிரச்னையில் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தமிழக முதல்வா் தயாராக இருக்க வேண்டும் என்றாா் பொன். ராதாகிருஷ்ணன். பேட்டியின்போது, கட்சியின் மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.