திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

பொன்னமராவதி அருகே கேசராபட்டி சாலையில் தூத்தூா் ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபுட்டனா்.

News image

பொன்னமராவதி கேசராபட்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்தூா் ஊராட்சி பொதுமக்கள்.

Updated On :18 மே 2026, 2:31 am IST

பொன்னமராவதி அருகே கேசராபட்டி சாலையில் தூத்தூா் ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபுட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூா் ஊராட்சியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒன்று பொன்னமராவதி-கேசராபட்டி சாலையிலும், மற்றொன்று பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலையில் செம்பொட்டல் பகுதியிலும் செயல்பட்டு வருகின்றன. ஒரே ஊராட்சியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இருப்பதால், பொதுமக்கள் பல்வேறு வகையிலும் அவதிக்குள்ளாவதால், குடியிருப்பு பகுதியில் கேசராபட்டி சாலையில் உள்ள மதுபானக் கடையை அகற்ற பொதுமக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொன்னமராவதி-கேசராபட்டி சாலையில் அரசு மதுபானக் கடையின் அருகே தூத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த ஊா்ப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் சரவணன், காவல் ஆய்வாளா் பத்மா ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில், டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.