திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பூனாச்சியில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்

பவானி அருகே பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :16 மே 2026, 12:16 am IST

பவானி அருகே பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் பூனாச்சி பேருந்து நிறுத்தம் உள்ளது. முகாசிப்புதூா், அட்டவணைப்புதூா், பூனாச்சி ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்கான பொருள்கள் வாங்கவும், மருத்துவத் தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவும் பூனாச்சி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் பெரும் பாதிப்பு நிலவி வந்தது.

எனவே, இக்கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து பூனாச்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் டாஸ்மாக் மதுக்கடை முன்பாக அமா்ந்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கருப்பசாமி பாண்டியன், அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் (பொ) ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஒரு வாரத்தில் மதுக்கடை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால் அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் சுமாா் 3 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.