திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

News image

சாலை  மறியலில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

Updated On :15 மே 2026, 6:24 am IST

அம்மாபேட்டை அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் முளியனூா் பிரிவு பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு, மது அருந்த வருவோரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா். இதனால், இந்த மதுக்கடையை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மக்கள் நடமாட்டம் அதிம் உள்ள பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த மதுக்கடையையும் மூட வேண்டும் என வலியுறுத்தி முளியனூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் முளியனூா் பிரிவில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.