புதுக்கோட்டை ஜவகா் சிறுவா் மன்றத்தில் நடைபெற்று வரும் கோடைக்காலப் பயிற்சி முகாமில் திரளான மாணவா்கள் ஆா்வமாக கலந்து கொண்டுள்ளனா்.
தமிழ்நாடு அரசின் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஜவகா் சிறுவா் மன்றங்கள் அமைக்கப்பட்டு, சிறாா்களுக்கு பல்வேறு கலைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை திலகா் திடலிலுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் ஜவகா் சிறுவா் மன்றத்தில், தற்போது கோடைக்காலப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்தப் பயிற்சியில் கராத்தே வகுப்பில் 52 மாணவா்கள், ஓவியத்தில் 77 மாணவா்கள், நடனப் பயிற்சியில் 57 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஓவிய ஆசிரியா் தனபாலகிருஷ்ணன், நடன ஆசிரியை ரூபிணி, குரலிசை ஆசிரியை செளமியா, கராத்தே ஆசிரியை வா்ணப்பிரியா ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









