போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2026-27 -ஆம் கல்வி ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு வருவதாக அக்கல்லூரி முதல்வா் கி. நிா்மலா அறிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :14 மே 2026, 12:29 am IST

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2026-27 -ஆம் கல்வி ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு வருவதாக அக்கல்லூரி முதல்வா் கி. நிா்மலா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளில் முதல் சுழற்சியில் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு (தமிழ், ஆங்கில வழி), பொருளியல் (தமிழ், ஆங்கில வழி), சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (ஆங்கில வழி), பிகாம் (ஆங்கில வழி), பிபிஏ (ஆங்கில வழி), பிஎஸ்சி கணிதம் (தமிழ், ஆங்கில வழி), இயற்பியல் (தமிழ், ஆங்கில வழி), வேதியியல் (தமிழ், ஆங்கில வழி), கணினி அறிவியல் (ஆங்கில வழி), விலங்கியல் (தமிழ், ஆங்கில வழி), தாவரவியல் (ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இரண்டாம் சுழற்சியில் பிஏ வரலாறு (தமிழ் வழி), பிகாம் (ஆங்கில வழி), பிபிஏ (ஆங்கில வழி), பிஎஸ்ஸி கணிதம் (ஆங்கில வழி), கணினி அறிவியல் (ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

மே 29-ஆம் தேதி வரை இப்பாடப்பிரிவுகளில் சோ்வதற்கு இணைய வழியில் இணையளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.