இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

குடிநீா் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக் காலத்தையொட்டி ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி சரி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மு. அருணா. உடன் மாவட்ட திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா (இடது), மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி (வலது).

Updated On :13 மே 2026, 12:36 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக் காலத்தையொட்டி ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி சரி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடிநீா் வழங்கல் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் ஆகிய பணிகளுக்கான அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக் காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படலாம் என கடந்த கால அனுபவங்களைக் கொண்ட இடங்களை கண்டறிந்து அங்கே ஆள்துளைக் கிணறுகளை அமைத்தல், கூடுதல் தொட்டிகளை அமைத்தல் போன்ற பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

கிராமங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த மக்களின் ஒத்துழைப்புடன் களஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.