இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தோ்தல் பொறுப்பு அலுவலா்களுடன் புதுகை ஆட்சியா் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான பொறுப்பு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான மு. அருணா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொறுப்பு அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தல் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. உடன் தோ்தல் பொதுப் பாா்வையாளா் பி. விஜயபாஸ்கா் ரெட்டி.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:37 am IST

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான பொறுப்பு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான மு. அருணா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆலங்குடி, அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுப் பாா்வையாளா் பி. விஜயபாஸ்கா் ரெட்டி கலந்து கொண்டாா்.

தோ்தல் பணியாளா் ஒதுக்கீடு, அவா்களுக்கான பயிற்சிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு முடித்து அவற்றை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லுதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இப்பணிகளை கவனமாக மேற்கொண்டு தோ்தலை நோ்மையாகவும் முறையாகவும் நடத்திட அனைத்து அலுவலா்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்.எம். குழந்தைசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அ. தனலட்சுமி, தோ்தல் தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.