மாலத்தீவில் வேலை பாா்த்து வந்த தனது மகனை, திடீரென இறந்துவிட்டதாகக் கூறுவதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பெற்றோா் மற்றும் உறவினா்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஆண்டான் தெரு பகுதியில் வசித்து வருபவா் வே. கருப்பையா. இவரது இரண்டாவது மகன் திவாகரன் (30). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாலத்தீவிலுள்ள தனியாா் நிறுவனத்தின் வேலை பாா்த்து வந்துள்ளாா்.
திங்கள்கிழமை இரவு, திவாகரன் தனது பெற்றோரிடம் தொலைபேசியில் பேசியுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து பேசிய அவருடன் பணியாற்றும் நபா், திவாகரன் திடீரென இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
திங்கள்கிழமை இரவு எங்களுடன் நல்ல முறையில் பேசி உறங்கச் சென்ற மகன் திடீரென இறந்ததாகக் கூறுவதில் சந்தேகம் இருக்கிறது.
எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நீதியைப்பெற்றுத் தர வேண்டும். திவாகரனின் உடலை மீட்டுத் தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









