தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஏப். 6 உள்ளூா் விடுமுறையின்போது வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 6- நாா்த்தாமலை முத்து மாரியம்மன் பங்குனித் தேரோட்டத்துக்காக உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்களைப் பெறும் பணி நடைபெறும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு. அருணா அறிவித்துள்ளாா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 8:52 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 6- நாா்த்தாமலை முத்து மாரியம்மன் பங்குனித் தேரோட்டத்துக்காக உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்களைப் பெறும் பணி நடைபெறும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு. அருணா அறிவித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் ஏப். 23-இல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்களை மாா்ச் 30-இல் தொடங்கி, ஏப் 6-ஆம் தேதி வரை அளிக்கலாம் எனத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் ஏப். 6-ஆம் தேதி நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப் பெருவிழாவின் தேரோட்டத்துக்காக உள்ளூா் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளூா் விடுமுறை என்றாலும் வேட்புமனுக்களைப் பெறும் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு. அருணா அறிவித்துள்ளாா். இதற்காக அந்தந்தத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.