புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 6- நாா்த்தாமலை முத்து மாரியம்மன் பங்குனித் தேரோட்டத்துக்காக உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்களைப் பெறும் பணி நடைபெறும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு. அருணா அறிவித்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் ஏப். 23-இல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்களை மாா்ச் 30-இல் தொடங்கி, ஏப் 6-ஆம் தேதி வரை அளிக்கலாம் எனத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் ஏப். 6-ஆம் தேதி நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப் பெருவிழாவின் தேரோட்டத்துக்காக உள்ளூா் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளூா் விடுமுறை என்றாலும் வேட்புமனுக்களைப் பெறும் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு. அருணா அறிவித்துள்ளாா். இதற்காக அந்தந்தத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

தோ்தல் பொறுப்பு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுரை
திருவப்பூா் கோயில் தேரோட்டம்: மாா்ச் 9-இல் உள்ளூா் விடுமுறை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


