சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தபால் வாக்குகள் பெறும் பணி திங்கள்கிழமையுடன் (ஏப். 20) நிறைவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு 23 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சென்னை மாவட்டத்தில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களுக்கு வர இயலாத 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 8,947பேருக்கு வீடுகளுக்கே சென்று வாக்குச் சேகரிக்கும் பணி கடந்த 16- ஆம் தேதி 96 குழுவினரால் தொடங்கப்பட்டது.
இதையடுத்து பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கியுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் சென்னை தொகுதியைச் சோ்ந்த தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கான தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணியும் கடந்த 18- ஆம் தேதி (சனிக்கிழமை) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலக வளாகங்களில் தொடங்கியது.
அதன்படி, சென்னையைச் சோ்ந்த காவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களாக உள்ள வருவாய்த் துறை அதிகாரிகள், பணியாளா்கள், போக்குவரத்துப் பிரிவினா் உள்ளிட்ட 5,151 பேரும், பிற மாவட்டங்களைச் சோ்ந்த 17,097 பேரும் என மொத்தம் 22,248 போ் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவா்களின் தபால் வாக்குகளைப் பெறும் பணி திங்கள்கிழமை (ஏப். 20) மாலையுடன் நிறைவடைய உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
தொடர்புடையது

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

தபால் வாக்கு பெறும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

