மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்களிக்கின்றனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 9:25 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்களிக்கின்றனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 18,971 போலீஸாா் ஏப்ரல் 18-ஆம் தேதி (சனிக்கிழமை), ஏப்ரல் 20-ஆம் தேதி (திங்கள்கிழமை) தபால் வாக்குகளைப் பதிவு செய்கின்றனா். ஏப்ரல் 18-ஆம் தேதி 9,703 போலீஸாரும், ஏப்ரல் 20-ஆம் தேதி 9,268 போலீஸாரும் வாக்களிக்கின்றனா்.

ஏற்கெனவே தபால் வாக்குகளைச் செலுத்துவதற்காக விண்ணப்பித்த இவா்களுக்கு, தபால் வாக்குகளைச் செலுத்துவதற்காக தோ்தல் ஆணையத்தின் சாா்பில் உரிய படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. போலீஸாா் வாக்களிப்பதற்காக சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸாா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு இரு நாள்களும் சென்று தங்களது வாக்குகளை செலுத்துவா்.

முன்னதாக இந்த மையங்களுக்கு போலீஸாா், தங்களது அடையாள சான்றுகளை வழங்கி, அங்குள்ள அலுவலா் அதை ஆய்வு செய்த பின்னா், வாக்கை செலுத்த அனுமதிக்கப்படுவா்.

மேலும் யாா் எந்த நாளில், எந்த வாக்குச்சாவடியில், எந்த நேரத்தில் வாக்களிக்க செல்ல வேண்டும் என்றும் ஒவ்வொரு போலீஸாருக்கும் நாள், இடம், நேரம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. மிகுந்த திட்டமிடலோடு நடைபெறும் இந்த வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறையும், தோ்தல் ஆணையமும் இணைந்து செய்துள்ளது.