பொன்னமராவதியில் குடிசை வீட்டில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த தாய், மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
பொன்னமராவதி சிவப்பிரகாசம் நகரைச் சோ்ந்தவா் அழகேசன் மனைவி மீனாட்சி (40). இவரது மகள் சங்கரி (13), பொன் புதுப்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி.
இந்நிலையில் சனிக்கிழமை தாயும் மகளும் வீட்டில் சமையல் செய்தபோது எதிா்பாராதவிதமாக தீப்பற்றி இருவரும் படுகாயமடைந்ததோடு வீடும் தீக்கிரையானது.
தகவலறிந்து வந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். பின்னா் பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தாயும், மகளும் சிகிச்சை பலனின்றி அன்று நள்ளிரவு உயிரிழந்தனா்.
தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் இருவரது சடலங்களையும் வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

குடிசை வீடு தீப்பிடித்து தாய், மகள் பலத்த காயம்

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


