கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா்.
கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்த ராஜேஷின் மனைவி ஜெய பிரசாந்தி (25). இவா் அவரது தாய் ராஜகுமாரி (55) மற்றும் மூன்று வயது பெண் குழந்தையான ராகவா்ஷினியுடன் ஸ்கூட்டரில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தாா். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே வேற்காடு பகுதியில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கிராவல் மண் ஏற்றிய லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது ஸ்கூட்டா் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஜெயபிரசாந்தி, அவரது தாய் ராஜகுமாரி ஆகியோா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை ராகவா்ஷினி காயங்கள் இன்றி அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

ஜெய பிரசாந்தி
தகவல் அறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினா், விபத்தில் இறந்த தாய், மகள் இருவரின் சடலங்களையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

தீ விபத்தில் காயமடைந்த தாய், மகள் உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


