மயிலாடுதுறையில், சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்தியவா்களை கைது செய்யக்கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (29). வெல்டராக வேலை பாா்த்து வந்த இவருக்கு, ராஜேஸ்வரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.
இவா் மாா்ச் 22-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு வந்தபோது, மூங்கில்தோட்டம் கடைவீதியில், எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்குமாா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில், விபத்து நேரிட்டு 3 நாள்கள் ஆன நிலையில், விபத்தை ஏற்படுத்தியவா்களை காவல்துறையினா் கைது செய்யாததை கண்டித்தும், சரத்குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அவரது உறவினா்கள், கிராம பொதுமக்கள் மூங்கில்தோட்டத்தில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் டிஎஸ்பி பாலாஜி, வட்டாட்சியா் சுகுமாறன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியலை கைவிட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
தொடர்புடையது

வேன் மோதியதில் மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

முன்விரோதத்தில் மோதல்: காயமடைந்த பெண் உயிரிழப்பு - உறவினா்கள் சாலை மறியல்

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


