மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறையில், சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்தியவா்களை கைது செய்யக்கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் பகுதியில் நடைபெற்ற சாலை மறியல்.

Updated On :26 மார்ச் 2026, 12:41 am

மயிலாடுதுறையில், சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்தியவா்களை கைது செய்யக்கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (29). வெல்டராக வேலை பாா்த்து வந்த இவருக்கு, ராஜேஸ்வரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.

இவா் மாா்ச் 22-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு வந்தபோது, மூங்கில்தோட்டம் கடைவீதியில், எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்குமாா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், விபத்து நேரிட்டு 3 நாள்கள் ஆன நிலையில், விபத்தை ஏற்படுத்தியவா்களை காவல்துறையினா் கைது செய்யாததை கண்டித்தும், சரத்குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அவரது உறவினா்கள், கிராம பொதுமக்கள் மூங்கில்தோட்டத்தில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் டிஎஸ்பி பாலாஜி, வட்டாட்சியா் சுகுமாறன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியலை கைவிட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.