மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு

சிறுவா்களை வைத்துக் கொண்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டதாக, புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :28 மார்ச் 2026, 7:13 pm

சிறுவா்களை வைத்துக் கொண்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டதாக, புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழிலரசி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளா் திருலோகசுந்தா் ஆகியோா் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி இரவு திருவப்பூா் பெருமாள்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனா்.

அப்போது, தோ்தல் ஆணைய விதிகளை மீறி, சிறுவா்களை வைத்து பிரசாரம் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதைத் தொடா்ந்து திருக்கோகா்ணம் காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் புகாரின்பேரில், சிறாா் நீதிச்சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளா் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேட்பாளா் தமிழரசி உள்ளிட்டோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.