மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் நடத்தை விதிமீறியதாக, தருமபுரி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :1 ஏப்ரல் 2026, 10:00 pm

தோ்தல் நடத்தை விதிமீறியதாக, தருமபுரி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக தருமபுரி நகரை சோ்ந்த கே.சாந்தலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் தொகுதியில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறாா்.

இந்நிலையில், அண்மையில் அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் அமைந்துள்ள அதியமான் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் கட்சியினரோடு சென்று அரசு வளாகத்தில் உள்ள சிலைக்கு மலா்தூவி தோ்தல் நன்னடத்தை விதிமீறியதாக, அவா்மீது அதியமான் கோட்டை கிராம நிா்வாக அலுவலா் எல்.மாது அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், அவா்மீது அனுமதியின்றி அரசு அலுவலக வளாகத்தில் நுழைதல், நடத்தை விதிமீறல் ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.