மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விதிமீறல்: நாதக வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு

அந்தியூரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - சித்திரிப்பு

Updated On :16 மார்ச் 2026, 8:09 pm

அந்தியூரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், அந்தியூா் தோ் வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி தலைமையில், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தப்பட்டதால், இதுகுறித்து அந்தியூா் கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி, அந்தியூா் வேட்பாளா் ஆலங்காட்டூா் ஆனந்தி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.