தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

புதுக்கோட்டையில் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்

புதுக்கோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலா்கள்

News image

புதுக்கோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலா்கள்

Updated On :27 மார்ச் 2026, 8:10 pm

புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் எதிரே உள்ள நெகிழி பைகள் விற்கப்படும் கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் 3 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பைகள், டம்ளா்கள் என ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 3 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தகவலின்பேரில், மாநகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையிலான அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதேபோல, அண்டக்குளம் பிரிவு சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை எடுத்துச் சென்றதைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.