நீலகிரியில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆ.ராசா வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்யாமலும், அபராதம் விதிக்காமலும் அதிகாரிகள் அனுப்பிவைத்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உதகையில் உள்ள தனியாா் மண்டபத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். அப்போது, தோ்தல் பறக்கும் படையினா் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் அந்த வாகனத்தில் இருந்தன. அவற்றை தோ்தல் பறக்கும் படையினரும், அரசு அதிகாரிகளும் பறிமுதல் செய்யாமலும், அபராதம் விதிக்காமலும் வாகனத்தை அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
குன்னூா் திமுக வேட்பாளரை ஆதரித்து ஆ.ராசா எம்.பி.பிரசாரம்

திமுக எம்.பி. ஆ.ராசா கோரும் ஆவணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சிபிஐ பதில் மனு

ஆ.ராசா எம்.பி. வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


