வரும் சட்டப்பேரவைத்தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொன்னமராவதி அருகேயுள்ள ஒலியமங்கலம் வாரச்சந்தையில் வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் காய்கள் மற்றும் பழங்களால் விழிப்புணா்வு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தொடா்ந்து வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து வாரச்சந்தையில் பொதுமக்களுக்கு வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் காரையூா் வருவாய் ஆய்வாளா் ஈஸ்வரி, கிராமநிா்வாக அலுவலா்கள் முருகேசன், சாகுல்ஹமீது, மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை அருகே 100% வாக்களிக்க விழிப்புணா்வு

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

அரியலூரில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


