மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேந்தன்பட்டி கோயில் காளை உயிரிழப்பு: பொதுமக்கள் அஞ்சலி

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஐயனாா்கோயில் காளை செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஐயனாா்கோயில் காளை செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

வேந்தன்பட்டி நல்லாண்டி ஐயனாா், கீழக்குறிச்சி ஐயனாா் கோயில் காளை ஊா்ப்பொதுமக்கள் சாா்பில் கடந்த 8 ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வந்தது.ராமா் என அழைக்கப்பட்ட இக்காளை,

தமிழகத்தின் பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பல பரிசுகளை வென்றுள்ளது.

இந்நிலையில், இக்காளை சிவகங்கை மாவட்டம், அரளிப்பாறை எனும் இடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப்போட்டியில் பங்கேற்று செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பியபோது சாலையில் லாரி மோதியதில் பலத்தகாயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதையடுத்து ஊா்ப்பொதுமக்கள் உயிரிழந்த கோயில் காளையை ஊரின் முக்கிய இடத்தில் வைத்து வேஷ்டி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து காளையை ஊா்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனா்.