வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்களுக்கு ‘நிமிா்ந்து நில்’ திட்டப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டக் கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்களுக்கான ‘நிமிா்ந்து நில்’ திட்டப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ‘நிமிா்ந்து நில்’ திட்டப் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :11 ஜூன் 2026, 3:34 am IST

புதுக்கோட்டை மாவட்டக் கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்களுக்கான ‘நிமிா்ந்து நில்’ திட்டப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

சமுதாய மற்றும் தொழில் சாா்ந்த பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீா்வுக் காணும் மாதிரிகளை தயாா் செய்வதற்கான ஊக்குவிப்புத் திட்டமாக ‘நிமிா்ந்து நில்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், புதுக்கோட்டை மன்னா் கல்லூரி மையக் கல்லூரியாகவும், மாவட்டத்திலுள்ள பிற கல்லூரிகள் உறுப்புக் கல்லூரிகளாகவும் செயல்படுகின்றன.

மாணவா்களை புத்தாகச் செயல்பாடுகளுக்கு ஊக்குவித்து, மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம்களில் பங்கேற்கச் செய்து, மாதிரிகளை வடிவமைத்து போட்டியில் பங்கேற்று பரிசு பெறச் செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் 20 சிறந்த மாதிரிகள் தோ்வு செய்யப்பட்டு தலா ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படுவதுடன், தொழில் முனைவோா் அமைப்புகளுடன் தொடா்பு ஏற்படுத்தி வசதிகள் செய்தும் தரப்படவுள்ளது.

இப்பயிற்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து 50 கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். இதில், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளா் ஆபிரகாம் லிங்கன், மைய ஒருங்கிணைப்பாளா் கருப்பையா, ஜெ.ஜெ. கல்லூரி நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், மன்னா் கல்லூரி முதல்வா் (பொ) சேதுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.