டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிதியளிப்பு பொதுக்கூட்டம்

News image
கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.
Updated On :22 பிப்ரவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டு சாதனை விளக்கம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் எ. ராமையன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் எஸ். நாராயணசாமி, வடக்கு ஒன்றிய செயலா் ஜி. பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் த. அன்பழகன் வரவேற்றாா்.

கட்சியின் மாநில செயலா் பெ. சண்முகம் 5 ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்க உரையாற்றினாா்.

முன்னதாக பெ. சண்முகம் சட்டப்பேரவை உறுப்பினா் பணி குறித்த ஓயாத உழைப்பில் ஐந்தாண்டுகள் என்ற புத்தகத்தை வெளியிட்டாா். நிகழ்வில் கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை, மாவட்டச் செயலா் எஸ். சங்கா் , மாநில செயற்குழு உறுப்பினா் என். பாண்டி, டி.சலோமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட குழு உறுப்பினா் வி. ரெத்தினவேல் நன்றி கூறினாா்.