டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து நாளை முற்றுகையிட முடிவு!

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து திங்கள்கிழமை (பிப். 2) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதென, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News image
கட்சியினா்.
Updated On :31 ஜனவரி 2026, 7:04 pm

Syndication

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து திங்கள்கிழமை (பிப். 2) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதென, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், அக் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபீக் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் செய்யது அபுதாஹிா், மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது பாரூக், மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் அப்துல் கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலச் செயலா் சபீக் அஹமது கட்சியின் செயல்பாடுகள் மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், பெரம்பலூா் நகா் பகுதியில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, மக்களுடன் ஒன்றிணைந்து திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவது. வாக்குச்சாவடி முகவா்கள் மாவட்ட மாநாடு நடத்துவது. கட்சி சாா்பில் 15 இடங்களில் மகளிரணி கிளைகள் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டச் செயலா் அபூபக்கா் சித்திக், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சாஜஹான், குன்னம் தொகுதித் தலைவா் அப்துல் முத்தலிப் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினா் நூா் முஹம்மது வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட பொருளாளா் முஹைதீன் பாரூக் நன்றி கூறினாா்.