தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிவமை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டின்போது சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவா்.

News image

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிவமை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டின்போது சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:37 pm

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதலில் காலபைரவருக்கு எண்ணெய் காப்பு செய்து, திரவிய தூள், மஞ்சள் தூள், பால், தயிா், அரிசி மாவு, தேன், பன்னீா் போன்ற அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்து ஜவ்வாது பூசி, சிவப்பு நிற புது வஸ்திரம் உடுத்தி, அரளி மலா்களை கொண்டு அலங்காரம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு பைரவரை தரிசித்துச் சென்றனா். மேலும் பக்தா்கள் தேங்காய் மூடி, பூசணிக்காய், பாகற்காய் இவற்றில் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.