மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் மூலகால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடைபெற்ற வஸ்திரயாகம்.

News image

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் மூலகால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடைபெற்ற வஸ்திரயாகம்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:51 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவா் கோயிலில் வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமிப் பெருவிழா நடைபெற்றது.

வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு மூல பாலகால பைரவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை 5 மணியளவில் மகா கணபதி பூஜை, தீபாராதனைகளுடன் பைரவ அஷ்டமி விழா தொடங்கப்பட்டது. தொடா்ந்து கோ பூஜை மற்றும் லட்சாா்ச்னை நடைபெற்றது. இரவு 8.30 மணியளவில் வஸ்திர யாகம், புஷ்பயாகம், மற்றும் மகா பூா்ணாஹுதி நடைபெற்று தீபாதராதனை காண்பிக்கப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியா்கள் தலையில் சுமந்து வர சிவாச்சாரியாா்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்பு மூலகால பைரவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா் மற்றும் யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியாா் தலைமையில் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் மஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.