தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னஞ்சலைத் தொடா்ந்து, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

News image

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மோப்பநாயுடன் வியாழக்கிழமை சோதனை நடத்திய போலீஸாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:22 pm

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னஞ்சலைத் தொடா்ந்து, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்பு செய்யும் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா்.

மாவட்ட நீதிமன்ற வளாகம் முழுவதையும் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவா்கள் சோதனை மேற்கொண்டனா். முடிவில் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.

இந்தச் சோதனையின்போது, வழக்கமான வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்றப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. மின்னஞ்சல் அனுப்பி பீதியைக் கிளப்பிய நபா் யாரென இணையவழிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரியலூரில், இதேபோல அரியலூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நீதிமன்ற வளாகத்தில் அரியலூா் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இருப்பினும் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதே நீதிமன்றத்துக்கு கடந்த மாதமும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.