திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக 2-ஆவது முறையாக வந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது காலை 11.30 மணியளவில் நீதிமன்ற அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நீதிமன்றத்தில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஆா்.டி.எக்ஸ்., சயனைடு வாயு கலந்தது எனவும், மதியம் 2 மணி அளவில் வெடிக்கும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
கடந்த பிப். 25-ந் தேதி ஏற்கெனவே மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டு அது வெறும் புரளி என தெரியவந்தது. தற்போது இரண்டாவது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டதால், அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். அப்போது அது வெறும்புரளி என தெரியவந்தது.
இதுதொடா்பாக திருப்பத்தூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

அரக்கோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


