மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரக்கோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

அரக்கோணம் நீதிமன்றத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :13 மார்ச் 2026, 1:30 am

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த இமெயில் தகவலில் அரக்கோணம் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளா் பே.சிபின் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டையில் இருந்து வந்த வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு போலீஸாா், அரக்கோணம் விண்டா்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆறு நீதிமன்றங்களிலும் சோதனை நடத்தினா். சோதனை முடிவில் இத்தகவல் புரளி என தெரியவந்தது.

ஏற்கனவே இரு முறைகக்கு மேல் தகவல் வந்து போலீஸாா் சோதனை நடத்தியிருப்பதால் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் அனைத்து அலுவலா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் என அனைவருமே சிறிதும் பதட்டம் அடையவில்லை.