அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த இமெயில் தகவலில் அரக்கோணம் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளா் பே.சிபின் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டையில் இருந்து வந்த வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு போலீஸாா், அரக்கோணம் விண்டா்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆறு நீதிமன்றங்களிலும் சோதனை நடத்தினா். சோதனை முடிவில் இத்தகவல் புரளி என தெரியவந்தது.
ஏற்கனவே இரு முறைகக்கு மேல் தகவல் வந்து போலீஸாா் சோதனை நடத்தியிருப்பதால் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் அனைத்து அலுவலா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் என அனைவருமே சிறிதும் பதட்டம் அடையவில்லை.
தொடர்புடையது

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

திருப்பத்தூா் நீதிமன்றத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


