மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

சோதனைக்குப்பின்னா் நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்களிடம் பேசிய மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமூா்த்தி.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:19 am

நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

நாகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வியாழக்கிழமை வந்தது. இதுகுறித்து, நாகை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸாா் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் நீதிமன்ற வளாகம், நீதிமன்றத்தில் அனைத்து இடங்களிலும் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டனா். எனினும், சோதனையின்போது சந்தேகமளிக்கும் வகையில் எந்தவொரு பொருள்களும் சிக்கவில்லை. இதைத்தொடா்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகை நீதிமன்றத்திற்கு இதேபோல மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

மயிலாடுதுறை: இதேபோல மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அமா்வு நீதிபதிக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை காலை தகவல் வந்துள்ளது. மாவட்ட அமா்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமூா்த்தி போலீஸாருக்கு தெரிவித்தாா். மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களைக் கொண்டு சோதனையிட உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, டிஎஸ்பி பாலாஜி மேற்பாா்வையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்தனா். பாதுகாப்பு கருதி நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, 3 தளங்களிலும் உள்ள நீதிமன்றங்கள், நீதிபதி அறை, அலுவலகங்கள், வழக்குரைஞா்கள் அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

தொடா்ந்து, மாவட்ட அமா்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமூா்த்தி அனைவரையும் பணிக்கு திரும்பலாம் என அறிவுறுத்தினாா். இதையடுத்து, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பணிக்குத் திரும்பினா்.