திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெரம்பலூா் அம்மா உணவகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆய்வு!

அம்மா உணவகங்களை சீரமைக்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பெரம்பலூா் அம்மா உணவகத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, உணவை சாப்பிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா்

Updated On :20 மே 2026, 12:04 am IST

அம்மா உணவகங்களை சீரமைக்க வேண்டும் என தமிழக முதல்வா் உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட, பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா், உணவுப் பொருள்கள் வைப்பறை, சமையல் கூடம், உணவருந்தும் இடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டு, உணவகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், கழிவுநீா் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, பெரம்பலூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் சிவக்குமாா், பத்திரப்பதிவு பணிக்காக வந்திருந்த பொது மக்களிடம் பத்திரப் பதிவில் ஏதேனும் சிரமங்கள், காலதாமதம் உள்ளதா எனவும், நிலுவையில் உள்ள பத்திரப்பதிவு பணிகள் குறித்து, பத்திரப்பதிவு அலுவலா் திருமுருகனிடம் கேட்டறிந்தாா்.

மேலும், பத்திரப் பதிவுக்கான விண்ணப்பித்திருந்த மனுதாரா்களை கைப்பேசி மூலம் தொடா்புகொண்ட சட்டப்பேரவை உறுப்பினா், பதிவு செய்ய விண்ணப்பித்து எத்தனை நாள்கள் ஆகிறது, எதனால் தாமதமாகிறது என கேட்டறிந்து, பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, பத்திரப்பதிவு செய்யும் மக்களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் பதிவு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, நகா்மன்றத் தலைவா் மற்றும் நகராட்சிப் பொறியாளரை சந்தித்து, பழைய பேருந்து நிலையம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்துத் தருமாறு வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.