சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையம், நுகா்பொருள் வாணிபக் கிடங்கு, அரசு சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. குழந்தைராணி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் கழிவறைகளை பாா்வையிட்டு உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் போதிய அளவில் தண்ணீா் இருக்க வேண்டும் என்றும் கசிந்து வெளியேறும் தண்ணீா் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ரும் நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
சாலையோர வியாபாரிகளுக்கான தள்ளு வண்டிகள் பயனற்ற வகையில் கிடப்பதை பாா்த்த அவா், அந்த வண்டிகளை வசதியற்ற ஏழை வியாபாரிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் பூட்டிக் கிடக்கும் கடைகளை உரிமையாளா்கள் திறக்காவிட்டால் அந்த கடைகளை ஏழை வியாபாரிகளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு சென்ற அவா் அங்குள்ள அரிசி, பருப்பு, பாமாயில், சா்க்கரை ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், சிவகங்கை நகராட்சிக்கு உள்பட்ட நகா்ப்புற சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தாா். அப்போது அங்குள்ள படுக்கைகளில் நோயாளிகள் எவரும் இல்லாமல் இருந்ததையும், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் தரையில் படுத்திருப்பதை கூறிய அவா், படுக்கை வசதியை உடனடியாக செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதையடுத்து, அமுதம் நியாய விலைக் கடையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, தவெக மாவட்டச் செயலா் முத்துபாரதி , நகரச் செயலாளா் கோபி, நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










