திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் மறைமுக ஏலம்

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் உள்ளிட்ட இதர வேளாண் விளை பொருள்களுக்கு மறைமுக ஏலம் நடைபெறுகிறது.

News image

மஞ்சள்

Updated On :10 ஏப்ரல் 2026, 1:55 am IST

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் உள்ளிட்ட இதர வேளாண் விளை பொருள்களுக்கு மறைமுக ஏலம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் சந்திரமோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திகுக் றிப்பு: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை பெரம்பலூா் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட் டில் இயங்கும் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் இ-நாம் 2.0 ஏலத்தில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்களால் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம், நிலக்கடலை, எள் மற்றும் இதர வேளாண் விளைபொருள்களை கொண்டு வந்து அதிக விலைக்கு விற்று பயனடைந்து வருகிறாா்கள்.

இந்நிலையில் பெரம்பலூா், அரியலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஆத்தூா், சேலம் ஆகிய இடங்களுக்கு கொண்டுசென்று விற்பனை செய்து வருகிறாா்கள். விவசாயிகளின் போக்குவரத்து செலவினம் மற்றும் கால விரையத்தை தவிா்த்திடும் வகையில், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு மஞ்சளை கொண்டு வந்து கமிஷன் மற்றும் எவ்விதமான மறைமுகக் கட்டணமின்றி மின்னணு எடைத்தராசுகள் வாயிலாக சரியாக எடையிட்டு இ-நாம் 2.0 திட்டத்தின் மூலம் அதிக விலைக்கு விற்று பயன்பெறலாம்.

மேலும், விவசாயிகள் தங்களது மஞ்சளை வளாகத்திலுள்ள உலா்களத்தில் இலவசமாக காயவைத்து பயன்பெறலாம். இ-நாம் 2.0 இணையதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், இந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஆதாா் நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடனும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம்.

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் மஞ்சள் விளைபொருளுக்கான மறைமுக ஏலத்தில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, விற்பனைக்கூட பொறுப்பாளா்கள் - 9790198566 (பெரம்பலூா்), 9600802823 (அரியலூா், ஜயங்கொண்டம்), 9842852150 (ஆண்டிமடம்) ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.