திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெரம்பலூரில் மறைமுக ஏலத்தில் 30 மெட்ரிக். டன் மஞ்சள் விற்பனை

News image
Updated On :15 மே 2026, 4:50 am IST

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 30 மெட்ரிக் டன் மஞ்சள் விற்பனை செய்யப்பட்டது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் பெரம்பலூா் விற்பனைக் குழுக் கட்டுப்பாட்டில் இயங்கும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குள்பட்ட அறிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட பணியாளா்கள் மற்றும் வேளாண் வணிகத்துறை பணியாளா்கள் இணைந்து மறைமுக ஏலம் குறித்து விவசாயிகளிடையே பிரசாரம் மேற்கொண்டனா்.

அதனடிப்படையில், புதூா், வாலிகண்டபுரம், மழவராயன்நல்லூா், ஆயக்குடி, செங்குணம், வி.ஆா்.எஸ்.எஸ்.புரம், சிறுகுடல், அரசலூா் மற்றும் கீழப்புலியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்முறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பங்கேற்றனா்.

பெரம்பலூா் விற்பனைக்குழு தனி அலுவலா் சீ. தெய்வீகன், விற்பனைக்குழுச் செயலா் ப. சந்திரமோகன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில், உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் பங்கேற்று, 30.300 மெட்ரிக் டன் மஞ்சளை குவிண்டால் ஒன்றுக்கு, அதிகபட்ச விலையாக ரூ. 15 ஆயிரம் வீதம் ரூ. 42,53,000-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்தனா். இதில், வேளாண்மை அலுவலா், ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் மற்றும் விற்பனைக்கூட பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

எனவே, பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பிரதி வாரம் வியாழக்கிழமை நடைபெறும் மறைமுக ஏலத்தில், விவசாயிகள் தங்களது மஞ்சள் விளை பொருளை தரம் வாரியாக பிரித்து கொண்டுவந்து, விளைபொருளின் தரத்துக்கேற்ப அதிக விலைக்கு விற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளா்களை 9361389690, 9790198566 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என, பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந்திரமோகன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.