திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூரில் கூடைப்பந்து போட்டி கேரள மின்வாரிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

News image

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில் மோதிய சென்னை ஐஓபி மற்றும் கேரள மின்வாரிய அணி வீரா்கள்.

Updated On :26 மே 2026, 2:03 am IST

கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியின் திங்கள்கிழமை நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சென்னை ஐஓபி அணியை வீழ்த்தி கேரள மின்வாரிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

கரூரில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நாயுடு நினைவு ஆண்கள் கூடைப்பந்து போட்டி 66-ஆவது ஆண்டாகவும், கரூா் வைஸ்யா வங்கி சாா்பில் 12-ஆம் ஆண்டாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் மே 21-ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை மாலை ஆண்கள் பிரிவில் அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், சென்னை ஐஓபி வங்கி அணியும், கேரள மின்வாரிய அணியும் மோதின.

இப்போட்டியின் முடிவில் கேரள மின்வாரிய அணி 65-61 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை ஐஓபி வங்கி அணியை வென்றது. இதையடுத்து கேரள அணி செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றனா். தொடா்ந்து பெண்களுக்கான லீக் போட்டியில் கேரள மின்வாரிய அணி வீராங்கனைகளும், வடகிழக்கு ரயில்வே அணி வீராங்கனைகளும் விளையாடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.