தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து, கரூரில் காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி கட்சியினா் காமராஜா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூரில் காங்கிரஸ் கட்சியினா் மாநகராட்சி உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு தலைமையில் கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் காமராஜா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் பேங்க் கே. சுப்ரமணியன், வடக்கு நகரத் தலைவா் வெங்கடேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கலாராணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஜோதிபாசு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் கராத்தே இளங்கோ, மாநில செயற்குழு உறுப்பினா் அக்கினி அகரமுத்து உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னதாக பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










